4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 759 புள்ளிகள் வீழ்ச்சி

 

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 759 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த புதன்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு, லாக்டவுன் விதிக்கப்படும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. இருப்பினும் அதற்கடுத்த 3 வர்ததக தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 759 புள்ளிகள் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.205.23 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 9) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.209.63 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 759 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 759.29 புள்ளிகள் சரிந்து 48,832.03 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 217.00 புள்ளிகள் சரிவு கண்டு 14,617.85 புள்ளிகளில் முடிவுற்றது.