வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா-2020

 

வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா-2020

விடுதலை சிறுத்தைகள் கட்சி்யின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2020ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா-2020


அம்பேத்கர் சுடர் விருது எழுத்தாளர் காஞ்சா அய்லையா(ஐதராபாத்)க்கும், பெரியார் ஒளி விருது ’தமிக மக்கள் ஒற்றுமை மேடை’ பேராசிரியர் அருணனுக்கும், காமராசர் கதிர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் வை.பாலசுந்தரம்(மறைவு)க்கும், காயிதே மில்லத் பிறை விருது நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டி.எம்.உமர் பாரூக்(மறைவு)அவர்களுக்கும், செம்மொழி ஞாயிறு விருது அரசு ஆலோசர் ரெ.பாலகிருஷ்ணன்(ஒடிசா)க்கும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் 26.12.2020 அன்று மாலை 3 மணிக்கு சென்னை திநகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இவ்விழாவுக்கு தலைமை ஏற்கிறார்.

இந்த விழா குறித்து, ‘’இது-களிப்பியல் நிகழ்வல்ல;கருத்தியல் மகிழ்வு.’’ என்று குறிப்பிட்டிருக்கிறது விசிக.

வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா-2020