தொடர்ந்து 3வது நாளாக முதலீட்டாளர்களின் பாக்கெட்டை காலி செய்த பங்குச் சந்தைகள். ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்

 

தொடர்ந்து 3வது நாளாக முதலீட்டாளர்களின் பாக்கெட்டை காலி செய்த பங்குச் சந்தைகள். ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 171 புள்ளிகள் குறைந்தது.

முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது, நிறுவனங்களின் நிதி முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, இந்தியா-சீனா எல்லை பதற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. பங்கு வர்த்தகம் இடையில் கடும் சரிவை சந்தித்தது இருப்பினும் பின்னர் சற்று வீழ்ச்சி குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக முதலீட்டாளர்களின் பாக்கெட்டை காலி செய்த பங்குச் சந்தைகள். ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், சன்பார்மா, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி. மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக முதலீட்டாளர்களின் பாக்கெட்டை காலி செய்த பங்குச் சந்தைகள். ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்
பாரத ஸ்டேட் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 879 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,804 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.03 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.50 ஆயிரம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 3வது நாளாக முதலீட்டாளர்களின் பாக்கெட்டை காலி செய்த பங்குச் சந்தைகள். ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.43 புள்ளிகள் சரிந்து 38,193.92 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 39.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,278.00 புள்ளிகளில் முடிவுற்றது.