பங்குச் சந்தைகள் சரிவு- முதலீட்டாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு

 

பங்குச் சந்தைகள் சரிவு- முதலீட்டாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவு கண்டது. முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அந்த ஏற்றம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டது, பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு ஏதுவாக எந்தவொரு செய்திகளும் வெளியாகதது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தகதியில் இருந்தது.

பங்குச் சந்தைகள் சரிவு- முதலீட்டாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு
அல்ட்ராடெக் சிமெண்ட்


சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்டராடெக் சிமெண்ட்ஸ், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், டைட்டன் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இந்த் வங்கி, பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகள் சரிவு- முதலீட்டாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,180 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,434 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.99 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.12 ஆயிரம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தைகள் சரிவு- முதலீட்டாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.41 புள்ளிகள் சரிந்து 37,973.22 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,222.40 புள்ளிகளில் முடிவுற்றது.