தொடர்ந்து 3வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

தொடர்ந்து 3வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 66 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அந்த ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் கடுமையாக இருந்தது. நாளை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர் இது போன்ற காரணங்களால் இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

தொடர்ந்து 3வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நஷ்டம்..
ஆக்சிஸ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், நெஸ்லே இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நஷ்டம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,226 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,412 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.77 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.75 ஆயிரம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 3வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நஷ்டம்..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 65.66 புள்ளிகள் சரிந்து 37,668.42 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 21.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,131.85 புள்ளிகளில் முடிவுற்றது.