சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 15 புள்ளிகள் ஏற்றம் கண்டது..

 

சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 15 புள்ளிகள் ஏற்றம் கண்டது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் வர்த்தக நிலவரம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக எந்தவொரு பெரிய செய்திகளும் இல்லாததால் பங்கு வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 15 புள்ளிகள் ஏற்றம் கண்டது..
பாரத ஸ்டேட் வங்கி


சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பாரத ஸ்டேட் வங்கி, டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், பார்தி ஏர்டெல் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 15 புள்ளிகள் ஏற்றம் கண்டது..
இண்டஸ்இ்ந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,403 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,283 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 189 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.86 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.59 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 15 புள்ளிகள் ஏற்றம் கண்டது..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.23 புள்ளிகள் உயர்ந்து 38,854.55 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,464.45 புள்ளிகளில் முடிவுற்றது.