அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.24 லட்சம் கோடி லாபம்…

 

அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.24 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்தது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது சில்லரை நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தது. இது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழி வகுத்தது. எஸ்.பி.ஐ. ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புக்கு ஏ.டி.ஐ. பத்திரங்களை விற்பனை செய்தது. இதனால் எஸ்.பி.ஐ. பங்குகள் விலை ஏற்றம் கண்டன. முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டனர். இது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது.

அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.24 லட்சம் கோடி லாபம்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் அல்டராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், டைட்டன், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.24 லட்சம் கோடி லாபம்…
டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,824 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 887 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.27 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.24 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 646.40 புள்ளிகள் உயர்ந்து 38,840.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 171.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,449.25 புள்ளிகளில் முடிவுற்றது.