சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தில் தொடர்ந்து 4வது தினமாக இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற உலக சுகாதார அமைப்பின் செய்தி, முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்..
டி.சி.எஸ்.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஒ.என்.ஜி.சி., ஐ.டி.சி., பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்..
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,247 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,435 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.42 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.83 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 303.72 புள்ளிகள் உயர்ந்து 40,182.67 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 95.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,834.60 புள்ளிகளில் முடிவுற்றது.