சென்செக்ஸ் 601 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 601 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டு வருகிறது. சென்செக்ஸ் இன்று மட்டும் 601 புள்ளிகள் உயர்ந்தது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 13.75 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் கொரோனா வைரஸிலிருந்து அதிகளவில் மீண்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 601 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..
எச்.டி.எப்.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், எச்.டி.எப்.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 601 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..
நெஸ்லே இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,506 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,191 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.36 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.20 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 601 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 600.87 புள்ளிகள் உயர்ந்து 39,574.57 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 159.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,662.40 புள்ளிகளில் முடிவுற்றது.