சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தம் படுத்தது. இன்று பங்கு வர்த்தம் ஏற்ற இறக்கமாக இருந்தது. இறுதியில் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எல் அண்டு டி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி நஷ்டம்..
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,030 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,560 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.85 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.34 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி நஷ்டம்..
எல் அண்டு டி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 172.61 புள்ளிகள் சரிந்து 39,749.85 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 58.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,670.80 புள்ளிகளில் முடிவுற்றது.