முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது..

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது..

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் ஏற்றம் கண்டது. இறுதியில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டெக் மகிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட் மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., பவர் கிரிட் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது..
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,373 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,313 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது
.

முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.77 புள்ளிகள் உயர்ந்து 40,544.37 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 23.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,896.80 புள்ளிகளில் முடிவுற்றது.