4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்… ரூ.4.66 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

 

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்… ரூ.4.66 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இருப்பினும் இந்த வாரம் சென்செக்ஸ் ஒட்டு மொத்த அளவில் 1,308 புள்ளிகள் உயர்ந்தது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மட்டும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. மற்ற தினங்களில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாத வாகன விற்பனை, சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்… ரூ.4.66 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..
காந்தி ஜெயந்தி

கடந்த திங்கள் முதல் நேற்று வரையிலான 4 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.94 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 25ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.28 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.66 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்… ரூ.4.66 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,308.39 புள்ளிகள் உயர்ந்து 38,697.05 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 366.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,416.95 புள்ளிகளில் முடிவுற்றது.