5 தினங்களில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.2.30 லட்சம் கோடி காலி… சென்செக்ஸ் 546 புள்ளிகள் வீழ்ச்சி..

 

5 தினங்களில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.2.30 லட்சம் கோடி காலி… சென்செக்ஸ் 546 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த திங்கள் முதல் புதன்கிழமை வரையிலான 3 தினங்களும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கங்கள் அதிகரித்துள்ள போதிலும் அது பங்கு வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வியாழக்கிழமையன்று மட்டும் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. மீண்டும் கொரோனா வைரஸ் பரவல், அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் பதற்றம் போன்ற காரணங்களால் அன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. இருப்பினும் நேற்று பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டது. ஒட்டு மொத்த அளவில் பார்த்தால் இந்த வார பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.2.30 லட்சம் கோடி காலி… சென்செக்ஸ் 546 புள்ளிகள் வீழ்ச்சி..
கோவிட்-19 பரிசோதனை

கடந்த 12ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நேற்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.39 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 9ம் தேதி) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.69 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.30 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

5 தினங்களில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.2.30 லட்சம் கோடி காலி… சென்செக்ஸ் 546 புள்ளிகள் வீழ்ச்சி..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 545.66 புள்ளிகள் குறைந்து 39,963.83 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 163.55 புள்ளிகள் சரிவு கண்டு 11,750.65 புள்ளிகளில் முடிவுற்றது.