சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 70 புள்ளிகள் ஏற்றம் கண்டது

 

சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 70 புள்ளிகள் ஏற்றம் கண்டது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.12 லட்சம் கோடி லாபம் கிடைத்து.

பங்குச் சந்தைகள் நேற்று மரணம் அடி வாங்கியதால் இன்று பங்கு வர்த்தக நிலவரம் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் முதலீட்டாளர்கள் இருந்தனர். இருப்பினும் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 40,100 புள்ளிகளை கடந்தது. அதேவேளையில் பின்னர் பங்கு வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் லேசான சரிவு ஏற்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 70 புள்ளிகள் ஏற்றம் கண்டது
டாடா ஸ்டீல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி. வங்கி, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 70 புள்ளிகள் ஏற்றம் கண்டது
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,478 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,156 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.12 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 70 புள்ளிகள் ஏற்றம் கண்டது
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 254.57 புள்ளிகள் உயர்ந்து 39,982.98 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 70.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,750.65 புள்ளிகளில் முடிவுற்றது.