சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்தது.

பங்குச் சந்தைகளில் இந்த வாரம் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் வர்த்தகம் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு முக்கிய காரணம். கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்த மற்றும் சில்லரை விலை பணவீக்கங்கள் உயர்ந்துள்ள போதிலும் பங்கு வர்த்தகத்தில் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்…
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., டெக் மகிந்திரா, பவர் கிரிட், இன்போசிஸ் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்…
என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,228 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,456 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 168 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.59 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது
.

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 169.23 புள்ளிகள் உயர்ந்து 40,794.74புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 36.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,971.05 புள்ளிகளில் முடிவுற்றது.