பங்குச் சந்தைகளில் இந்த வாரம் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

பங்குச் சந்தைகளில் இந்த வாரம் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் நிதி முடிவுகள், கொரோனா வைரஸ் நிலவரம் உள்ளிட்டவை இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், கர்நாடகா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, விப்ரோ மற்றும் மைண்ட்ட்ரீ உள்பட சுமார் 70 மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. வட்டிக்கு வட்டி போடுவதை தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை வரும் 13ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது.

பங்குச் சந்தைகளில் இந்த வாரம் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
விப்ரோ

கடந்த ஆகஸ்ட் மாத தொழில்துறை உற்பத்தி மற்றும் கடந்த செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை வரும் புதன்கிழமையன்று மத்திய அரசு வெளியிடுகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி விட்டது. இருப்பினும் கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

பங்குச் சந்தைகளில் இந்த வாரம் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் குளிர்காலம் தொடங்க உள்ளதால் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இது தவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.