சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல உயர்வுடன் தொடங்கியது. இந்திய பங்குச் சந்தைகள் இன்று பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. அதேவேளையில், என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி. மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி லாபம்..
டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,562 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,257 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 183 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.170.56 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.37 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 314.73 புள்ளிகள் உயர்ந்து 43,952.71 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,874.20 புள்ளிகளில் முடிவுற்றது.