வரும் வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 

வரும் வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

ஈகை பெருநாளை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். எச்.டி.எப்.சி., தாபர், சன்பார்மா, லுப்பின் மற்றும் டி.வி.எஸ். மோட்டார் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரும் வாரம் வெளிவர உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று முக்கிய கடனுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் இது சந்தைக்கு பெரிதும் உதவாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வரும் வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் ஹாங்காங் தொடர்பான புதிய சீன சட்டம், அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றங்களின் ப்ளாஷ் பாயிண்டாக மாறிவிட்டது. ஹாங்காங் மக்களின் அதிக உரிமைகளை பறிக்க சீனாவின் புதிய சட்டம் முன்மொழிகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வரும் வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

நாளுக்கு நாள் நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளை முதல் உள்நாட்டில் விமான போக்குவரத்து சேவைகள் தொடங்க உள்ளது. வரும் வியாழக்கிழமையன்று மே மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்குள் முடிக்கப்படும். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு மற்றும் உலக மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.