சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.11 லட்சம் கோடி லாபம்….

 

சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.11 லட்சம் கோடி லாபம்….

தொடர்ந்து 2 தினங்களாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று மீண்டும் ஏற்றம் கண்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால் அந்த வங்கியின் பங்கு விலை ஏற்றம் கண்டது. ஐ.டி. துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.11 லட்சம் கோடி லாபம்….

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில். இன்போசிஸ், டி.சி.எஸ்., இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஓ.என்.ஜி.சி., எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.11 லட்சம் கோடி லாபம்….

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,656 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,062 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 147 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.79 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.11 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.11 லட்சம் கோடி லாபம்….

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 329.17 புள்ளிகள் உயர்ந்து 35,171.27 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 94.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,383.00 புள்ளிகளில் முடிவுற்றது.