தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..

 

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. இன்று இந்த மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் ஜூன் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். மேலும் பங்கு வர்த்தகத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எந்தவொரு பெரிய தகவல்களும் வராததால் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,531 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,170 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 119 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.13 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 26.88 புள்ளிகள் சரிந்து 34,842.10 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 16.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,288.90 புள்ளிகளில் முடிவுற்றது.