முதலீட்டாளர்களுக்கு ரூ.2.04 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது….

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.04 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது….

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் வர்த்தகத்தில் சிறிய சரிவு ஏற்பட்டாலும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பல நிறுவனங்களின்  பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.04 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது….

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரீட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. என்.டி.பி.சி. நிறுவன பங்கு விலை எந்தமாற்றமும் இன்றி முடிவடைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.04 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது….

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,778 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 870 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.01 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.04 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது….

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 523.68 புள்ளிகள் உயர்ந்து 34,731.73 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 152.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,244.40 புள்ளிகளில் முடிவுற்றது.