மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… ரூ.58 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

 

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… ரூ.58 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

நாளை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால், ஜூலை மாத முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். ஸ்பைஸ்ஜெட் உள்பட பல நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை இன்று சரிவு கண்டது, சர்வதேச நிலவரங்களும் சாதகமாக இல்லாதது போன்ற பல காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… ரூ.58 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, சன்பார்மா, எல் அண்டு டி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நெஸ்லே இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் மாருதி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. பார்தி ஏர்டெல் பங்கு விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… ரூ.58 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,371 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,329 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 131 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.97 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.58 ஆயிரம் கோடியை இழந்தனர்.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… ரூ.58 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 421.82 புள்ளிகள் சரிந்து 38,071.13 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 97.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,202.85 புள்ளிகளில் முடிவுற்றது.