சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்தது…. ரூ.1.88 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

 

சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்தது…. ரூ.1.88 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்தது…. ரூ.1.88 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக்சிமெண்ட், கோடக்மகிந்திரா வங்கி, டி.சி.எஸ்., இண்டஸ்இந்த் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ.சி. வங்கி, நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஒ.என்.ஜி.சி. மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்தது…. ரூ.1.88 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,335 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,311 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்தது…. ரூ.1.88 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 558.22 புள்ளிகள் உயர்ந்து 38,492.95 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 168.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,300.55 புள்ளிகளில் முடிவுற்றது.