சென்செக்ஸ் 548 புள்ளிகள் உயர்ந்தது.. இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 548 புள்ளிகள் உயர்ந்தது.. இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி லாபம்

குறிப்பிட்ட நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் நிறுவன பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 548 புள்ளிகள் உயர்ந்தது.. இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. வங்கி, டைட்டன், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா, டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

சென்செக்ஸ் 548 புள்ளிகள் உயர்ந்தது.. இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,653 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 989 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.08 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 548 புள்ளிகள் உயர்ந்தது.. இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி லாபம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 548.46 புள்ளிகள் உயர்ந்து 37,020.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 161.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,901.70 புள்ளிகளில் முடிவுற்றது.