இறங்கி ஏறிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்…

 

இறங்கி ஏறிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. பின்னர் ஏற்றம் கண்டது. ஆனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்கு வர்த்தகம் மளமளவென சரிவு கண்டது. இருப்பினும் பங்கு வர்த்தகம் திடீரென ஏற்றம் காண தொடங்கியது. இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இண்டஸ்இந்த வங்கி ஆகிய 5 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

இறங்கி ஏறிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்…
பஜாஜ் பைனான்ஸ்


மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,569 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,351 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.180.81 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.03 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இறங்கி ஏறிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 452.73 புள்ளிகள் உயர்ந்து 46,006.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 137.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,466.30 புள்ளிகளில் முடிவுற்றது.