47 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்… முதலீட்டாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம்

 

47 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்… முதலீட்டாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து நான்காவது தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்கள் பங்குகளில் ஆர்வமுடன் முதலீடு செய்வது, பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான நிலவரம் போன்றவற்றால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி., பஜாஸ் பைனான்ஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., மாருதி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

47 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்… முதலீட்டாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம்
டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,388 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,583 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.185.20 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

47 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்… முதலீட்டாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 223.88 புள்ளிகள் உயர்ந்து 46,890.34 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 58 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,740.70 புள்ளிகளில் முடிவுற்றது.