தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பங்குகளை வாங்கி குவித்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்ததகத்தின் இடையே உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,857 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,168 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.185.10 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.50 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
.

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.29 புள்ளிகள் உயர்ந்து 46,666.46 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 114.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,682.70 புள்ளிகளில் முடிவுற்றது.