சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி லாபம்

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி லாபம்
இண்டஸ்இந்த் வங்கி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் ஏற்ற இறக்கமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி லாபம்
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,433 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,436 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் ஏற்றம்

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 39.55 புள்ளிகள் உயர்ந்து 39,113.47 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 9.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,559.25 புள்ளிகளில் முடிவுற்றது.