முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்… 5 நாளில் ரூ.4.16 லட்சம் கோடி லாபம்

 

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்… 5 நாளில் ரூ.4.16 லட்சம் கோடி லாபம்

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. கடந்த வியாழக்கிழமையன்று மட்டும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது இதர 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலவரம், நிறுவனங்களின் நிதி முடிவுகள், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது, கொரோனா வைரஸ் நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்… 5 நாளில் ரூ.4.16 லட்சம் கோடி லாபம்
ரூபாய் வெளிமதிப்பு

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. முந்தைய வார வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 14ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.151.39 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.16 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்… 5 நாளில் ரூ.4.16 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 557.38 புள்ளிகள் உயர்ந்து 38,434.72 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 193.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,371.60 புள்ளிகளில் முடிவுற்றது.