தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்..

 

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது மற்றும் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும் அளவுக்கு எந்தவொரு பாதகமான செய்திகளும் வெளியாகாதது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக்மகிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி, டைட்டன் மற்றும் மாருதி உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,874 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 915 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.81 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.54 புள்ளிகள் உயர்ந்து 38,528.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 138.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,385.35 புள்ளிகளில் முடிவுற்றது.