சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.94 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.94 ஆயிரம் கோடி லாபம்..

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் வர்த்தகம் திடீரென சரிவை சந்தித்தாலும் பின்னர் மீண்டும் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது வர்த்தகத்தின் உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம்.

சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.94 ஆயிரம் கோடி லாபம்..
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ, டெக் மகிந்திரா, மாருதி, ஓ.என்.ஜி.சி. மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.94 ஆயிரம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,643 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,129 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.94 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.94 ஆயிரம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 173.44 புள்ளிகள் உயர்ந்து 38,050.78 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 68.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,247.10 புள்ளிகளில் முடிவுற்றது.