ஏமாற்றம் அளித்த பங்கு வர்த்தகம்.. ஆனாலும் 5 நாளில் ரூ.12 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

 

ஏமாற்றம் அளித்த பங்கு வர்த்தகம்.. ஆனாலும் 5 நாளில் ரூ.12 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கடந்த ஜூலை மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு, கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்டவை பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் முதலீட்டாளர்களும் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததும் பங்கு வர்த்தகத்தின் இறக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஏமாற்றம் அளித்த பங்கு வர்த்தகம்.. ஆனாலும் 5 நாளில் ரூ.12 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.41 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.29 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

ஏமாற்றம் அளித்த பங்கு வர்த்தகம்.. ஆனாலும் 5 நாளில் ரூ.12 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 522.01 புள்ளிகள் குறைந்து 37,606.89 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 120.70 புள்ளிகள் சரிவு கண்டு 11,073.45 புள்ளிகளில் முடிவுற்றது.