2020 ஐபிஎல்: புதிய தசாப்தம்…புதிய அணி நிர்வாகம்…புதிய லோகோ – கலக்கும் ஆர்.சி.பி!

 

2020 ஐபிஎல்: புதிய தசாப்தம்…புதிய அணி நிர்வாகம்…புதிய லோகோ – கலக்கும் ஆர்.சி.பி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய லோகோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய லோகோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இருந்தது போலவே அதே சீறும் சிங்கம் இந்த புதிய லோகோவிலும் நீடிக்கிறது. முன்னதாக ஆர்.சி.பி அணியின் சமூக வலைதளங்களில் அந்த அணியின் பெயரில் இருந்து பெங்களூரு என்ற வார்த்தை நீக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அந்த அணியின் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற பக்கங்களில் புதிய லோகோவுடன் கூடிய புரோபைல் பிக்சர், கவர் பிக்சர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆர்.சி.பி அணியின் லோகோ மூன்றாவது முறையாக அப்டேட் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.