ராகுலை சந்திக்கும் உதயநிதி

 

ராகுலை சந்திக்கும் உதயநிதி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல்காந்தி இன்று 14.1.2014 மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காண வருகிறார். ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வரும் ராகுல், அங்கிருந்து கார் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் செல்கிறார்.

ராகுலை சந்திக்கும் உதயநிதி

ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டை பார்வையிடுகிறார் ராகுல். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு விழாவை அடுத்து தெற்கு வெளிவீதி, பழங்காநத்தம் பகுதிக்கு செல்லும் ராகுல்காந்திக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு தமிழர் பண்பாடு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராகுலை சந்திக்கும் உதயநிதி

இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல், பிற்பகல் 2 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் பங்கேற்க இருப்பதாகவும், ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்.