ஓசூரில் பொறியாளர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளை!

 

ஓசூரில் பொறியாளர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளை!

ஓசூர்

ஓசூரில் பொறியாளர் வீட்டில் 200 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கண்டபள்ளி எம்.எம்.நகரை சேர்ந்தவர் மாதையன் (50). பொறியாளர். இவர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தருமபுரியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 200 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

ஓசூரில் பொறியாளர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளை!

மறுநாள் காலை வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டதை அறிந்து, அங்கு வேலை செய்பவர்கள் மாதையனுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, மாதையன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோப்ப நாய் ரேஷ்மி மற்றும் கைரேகை நிபுணர்களை வர வழைத்து கொள்ளையர்களின் தடயங்களும் கேரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.