“பெண்ணை தூக்கினார் ,வாடகை வீட்டில் போட்டு தாக்கினார்.” -20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர்

 

“பெண்ணை தூக்கினார் ,வாடகை வீட்டில் போட்டு தாக்கினார்.” -20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர்

16 வயதான சிறுமியை மூன்று மாதங்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது

“பெண்ணை தூக்கினார் ,வாடகை வீட்டில் போட்டு தாக்கினார்.” -20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர்

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த மகாவீர் என்பவர் தனது கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தினார் .அதன் பின்னர் அந்த சிறுமியை ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்தார் .அதன் பிறகு அந்த சிறுமியை மூன்று மாதங்கள் யாருக்கும் தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்தார் .

அதனால் மூன்று மாதங்களாக தன்னுடைய மகளை காணாத அவரின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்தார் .போலீசில் அவரளித்த புகாரில் தன்னுடைய மகளை ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை என்றும் ,அதனால் அந்த பகுதியை சேர்ந்த மகாவீர் மீது சந்தேகம் கொள்வதாகவும் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார்கள் .அதன் பிறகு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த மகாவீரை போலீசார் கைது செய்துஅவரிடம் மூன்று மாதங்களாக பிணைக் கைதியாக இருந்த 16 வயது சிறுமியை  மீட்டனர்.

அதன் பிறகு அவர் மீது  போக்ஸோ சட்டத்தின் கீழ் கற்பழிப்பு தொடர்பான பிற பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு , அவர் மீது குற்றப்பத்திரிகை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது குறைந்தது 22 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்போது ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், 2016 ல் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 40 வயது மஹாவீருக்கு  20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

“பெண்ணை தூக்கினார் ,வாடகை வீட்டில் போட்டு தாக்கினார்.” -20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர்