20 ஆண்டுகளாக ஜெகன்நாத் கோயிலுக்கு வெள்ளி ரத சிலையை பரிசாக வழங்கும் இஸ்லாமியர்: காரணம் இதுதானாம்!

 

20 ஆண்டுகளாக ஜெகன்நாத் கோயிலுக்கு வெள்ளி ரத சிலையை பரிசாக  வழங்கும் இஸ்லாமியர்: காரணம் இதுதானாம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புகழ்பெற்ற ஜெகன்நாத் கோயிலில் வரும் 4ஆம் தேதி முதல் ரத யாத்திரை திருவிழா நடைபெறவுள்ளது.

குஜராத் : குஜராத்தில் ஜெகன்நாத் கோயில் ரத யாத்திரை தொடங்க இருக்கும் நிலையில் இஸ்லாமிய நபர் ஒருவர் வெள்ளி ரதத்தை அக்கோயிலுக்குப் பரிசாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

muslim

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புகழ்பெற்ற ஜெகன்நாத் கோயிலில் வரும் 4ஆம் தேதி முதல் ரத யாத்திரை திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கு  ஜாமால்பூர் நகரை சேர்ந்த இஸ்லாமியர் ரவூஃப் பங்காலி என்பவர் வெள்ளியிலான ரத சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

muslim

இதுகுறித்து கூறும் ரவூஃப் பங்காலி,  ‘இந்த சிலையை 20 ஆண்டுகளாக நாங்கள் கொடுத்து வருகிறோம். கோத்ரா கலவரத்திற்குப் பிறகு இருபிரிவினருக்கும் இடையே நட்புறவு பலப்படவே இவ்வாறு அளித்து வருகிறோம்’ என்றார். இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.