“அவளுக்கு புதுசு புதுசா வேணும்டா “காதலிக்காக ஒரு காதலன் செஞ்ச களவாணித்தனம்.

 

“அவளுக்கு புதுசு புதுசா வேணும்டா “காதலிக்காக ஒரு காதலன் செஞ்ச களவாணித்தனம்.

தங்களின் காதலிகளுக்காக இரு வாலிபர்கள் 26 செல்போன் மற்றும் 3 பைக் திருடியதை போலீசார் கண்டுபிடித்தார்கள் .

“அவளுக்கு புதுசு புதுசா வேணும்டா “காதலிக்காக ஒரு காதலன் செஞ்ச களவாணித்தனம்.

புனேவைச் சேர்ந்த சாகர் மோகன் சவலே மற்றும் நிலேஷ் தேவானந்த் பலேராவ் என்ற 20 வயதான  இரண்டு இளைஞர்கள் அதே பகுதியில் வசிக்கும் பெண்களை காதலித்து வந்துள்ளார்கள் .அதனால் அவர்கள் இருவரும் தங்களின் காதலிகளுக்கு அடிக்கடி பரிசுகள் கொடுத்து  அவர்களின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்தார்கள் .இந்நிலையில் அந்த காதலிகள் புது புது செல்போன்களை கேட்டு அவர்களை தொல்லை படுத்தியுள்ளார்கள் .அதனால் ஒரு நிலையான வருமானம் இல்லாத அவர்கள் பணமில்லாமல் சிரமப்பட்டார்கள் .அதன் காரணமாக அவர்கள் தங்களின் காதலிகளின் மனம் கவர செல்போன்களையும் ,பைக்குகளையும் திருட ஆரம்பித்தார்கள் .இதன்படி அவர்கள் கடந்த ஒரு மாதத்தில் 26 செல்போன்களையும் .மூன்று பைக்குகளையும் திருடி தங்களின் காதலிக்கு பரிசாக வழங்கியுள்ளார்கள் .

இந்த பைக் திருட்டு மற்றும் செல்போன் திருட்டு பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்து இந்த குற்றவாளிகளை  பிடிக்க பொறி வைத்தார்கள் .அதன் படி கடந்த வாரம் அவர்கள்  கையும் களவுமாக பிடிபட்டார்கள் .அப்போது அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் ஒரு  பைக்கை  போலீசார் மீட்டார்கள் .அவற்றின் மதிப்பு 2.42 லட்சம் என்று மதிப்பிடப்பட்டது .மேலும் அவர்களிடம் போலீஸ் விசாரித்த போது அவர்கள் 26க்கும் மேற்பட்ட போன்களை திருடி காதலிகளுக்கு வழங்கி ,பின்னர் அவர்களின் பழைய போன்களை விற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது .பின்னர் போலீசார் அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

“அவளுக்கு புதுசு புதுசா வேணும்டா “காதலிக்காக ஒரு காதலன் செஞ்ச களவாணித்தனம்.