பாலக்கோடு அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த இருவர் கைது

 

பாலக்கோடு அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த இருவர் கைது

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த 2பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக மதுபாக்கெட்டுகளை கடத்திவந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க தருமபுரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலக்கோடு அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த இருவர் கைது

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில் போலீசார் நேற்று தீவிர வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை போலீசார் மறித்து சோதனையிட்டபோது, வாகனத்தில் கர்நாடக மாநில மதுப்பாக்கெட்டுகளை கடத்திவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த விஜய்(23), கார்த்திக்(22) ஆகியோரை கைதுசெய்த போலீசார் அவர்களிடமிருந்து 73 கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.