மதுபோதையில் பெண் காவலரின் கையை கடித்த 2 இளைஞர்கள் கைது!

 

மதுபோதையில் பெண் காவலரின் கையை கடித்த 2 இளைஞர்கள் கைது!

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் வழங்க மறுத்த பெண் காவலரை தாக்கிய 2 போதை இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் இளவரசி. இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பணி முடிந்து, இடைக்கட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். சின்னவளையம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அங்கு மதுபோதையில் நின்ற 2 இளைஞர்கள் இளவசியை மறித்து லிஃப்ட் கேட்டு உள்ளனர்.

மதுபோதையில் பெண் காவலரின் கையை கடித்த 2 இளைஞர்கள் கைது!

இதற்கு இளவரசி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை தாக்கியதுடன், அவரது கையையும் பிடித்து கடித்து உள்ளனர். இதனால், இளவரசி அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து இளைஞர்களை பிடித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்த வல்லரசு, பிரபாகரன் என்பது தெரிய வந்தது. இதனையடுதது, இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.