மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப பலி!

 

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப பலி!

புதுச்சேரி அருகே மின்சாரம் தாக்கியதால் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நன்மையாக பலருக்கு ஆரம்பித்திருந்தாலும், எதிர்பாராத அளவுக்கு சேதத்தை அளித்து விட்டது. மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குறைந்ததாக இல்லை. இந்த கொடிய வகை கொரோனாவால் நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்து வருவதோடு, விபத்து உள்ளிட்ட பல துயர சம்பவங்களால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப பலி!

புதுச்சேரி அருகே இருக்கும் காட்டேரிகுப்பம் என்னும் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின், வேலைப்பாடுகள் முடிவடைந்த நிலையில் இருந்துள்ளன. அந்த கட்டிடத்தில் செல்வகுமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 2 பேரும் டைல்ஸ் ஒட்டுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென இவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த திடீர் விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.