கள்ளக்குறிச்சி- நகைக்கடையில் 4 சவரன் தங்கசெயினை திருடிய 2 பெண்கள் கைது

 

கள்ளக்குறிச்சி- நகைக்கடையில் 4 சவரன் தங்கசெயினை திருடிய 2 பெண்கள் கைது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 4 சவரன் தங்க நகையை திருடிச்சென்ற இரண்டு பெண்களை போலீசார் கைதுசெய்தனர்.

கள்ளக்குறிச்சி- நகைக்கடையில் 4 சவரன் தங்கசெயினை திருடிய 2 பெண்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சன்னதிதெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது நகைக்கடைக்கு நகை வாங்குவது போல வந்த 2 பெண்கள், கடையில் இருந்து 4 சவரன் தங்க செயினை திருடி சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்காரபுரம் போலீசார், மாவட்ட எஸ்.பி ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று சங்கராபுரம் தாலுகா அலுவலக பேருந்துநிறுத்தம் பகுதியில் நின்ற 2 பெண்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல்நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் நகைக்கடை திருட்டு

கள்ளக்குறிச்சி- நகைக்கடையில் 4 சவரன் தங்கசெயினை திருடிய 2 பெண்கள் கைது

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த கவிதா மற்றும் சுதா என்பதும், நகைக்கடையில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் மதுரை, சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதேபோன்று நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.