“கிணற்றில் மிதந்த திருநங்கைகளின் சடலங்கள்” கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம்; நெல்லையில் பரபரப்பு!

 

“கிணற்றில் மிதந்த திருநங்கைகளின் சடலங்கள்” கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம்; நெல்லையில் பரபரப்பு!

சமீபகாலமாக தமிழகத்தில் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெடிகுண்டு வீச்சு என பல கொடூர செயல்கள் மக்களை பதைபதைக்க செய்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று காலை சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவ்வாறு பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இன்று நெல்லையில் 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கிணற்றில் மிதந்த திருநங்கைகளின் சடலங்கள்” கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம்; நெல்லையில் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கக்கன் நகர் என்னும் பகுதியில் இருக்கும் 2 கிணற்றில் 2 திருநங்கைகள் உட்பட 3 பேரின் சடலங்கள் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு சோதனை செய்ததில், திருநங்கைகள் பவானி, அனுஷ்கா மற்றும் பவானியின் கணவர் முருகன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 2 திருநங்கைகளும் கடந்த சில நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. அதனால் அவர்களை கொலை செய்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.