கடலூரில் கொரோனா பாதிப்பால், 2 ரேஷன் கடை ஊழியர்கள் பலி!

 

கடலூரில் கொரோனா பாதிப்பால், 2 ரேஷன் கடை ஊழியர்கள் பலி!

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 2 ரேஷன் கடை ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை தொடக்க வேளாண் கூட்டறவு சங்கத்திற்குட்பட்ட எள்ளேரி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தவர் பன்னீர்(56). இவருக்கு கடந்த 3ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூரில் கொரோனா பாதிப்பால், 2 ரேஷன் கடை ஊழியர்கள் பலி!

இதேபோல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு உட்பட்ட கலியமலை ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்தவர் குணசேகர். கொரோனா பாதிப்பு காரணமாக ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து, 2 ரேஷன் கடை ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.