மினிவேன் மீது லாரி மோதி விபத்து – பெண் உள்பட இருவர் பலி!

 

மினிவேன் மீது லாரி மோதி விபத்து – பெண் உள்பட இருவர் பலி!

திருச்சி

தொட்டியம் அருகே சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிளை சேர்ந்த 6 பெண்கள், நேற்று நாமக்கல் மாவட்டம் பேளுகுறிச்சியில் நடந்த வாரச் சந்தையில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு, மினி ஆட்டோவில் திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை திருச்சி உறையூரை சேர்ந்த சந்திரசேகர்(45) என்பவர் ஒட்டி சென்றார்.

நேற்று மாலை திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சென்றபோது மினிவேன் மீது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் சந்திரசேகர் மற்றும் ஆட்டோவில் வந்த முசிறியை சேர்ந்த கந்தசாமி மனைவி வேணி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மினிவேன் மீது லாரி மோதி விபத்து – பெண் உள்பட இருவர் பலி!

மேலும், லால்குடியை சேர்ந்த ஜெயந்தி,, உறையூரை சேர்ந்த ஹரிணி, வெள்ளூர் சத்திரத்தை சேர்ந்த இந்துமதி, பிச்சாண்டார் கோவிலை சேர்ந்த ஜெயமணி. உறையூரை சேர்ந்த பழனியம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீசார், உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.