சிவகாசியில் கட்டிட தூண் சரிந்து விழுந்ததில் இளைஞர் உள்பட இருவர் பலி!

 

சிவகாசியில் கட்டிட தூண் சரிந்து விழுந்ததில் இளைஞர் உள்பட இருவர் பலி!

விருதுநகர்

சிவகாசியில் புதிதாக கட்டிவரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்ததில், வீட்டின் உரிமையாளர் மகன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில், இன்று கட்டிட தூணிற்கு கட்டியிருந்த சாரத்தை பிரிக்கும் பணியில், கொத்தனார் கருப்பசாமி (40) என்பவர் ஈடுபட்டிருந்தார். அவருக்கு உதவியாக செலவராஜின் மகன் டயான்ராஜ் (24) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிவகாசியில் கட்டிட தூண் சரிந்து விழுந்ததில் இளைஞர் உள்பட இருவர் பலி!

கருப்பசாமி சாரத்தை பரித்தபோது, எதிர்பாராத விதமாக கான்கிரீட் தூண் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கருப்பசாமி மற்றும் டயான்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகாசி கிழக்கு போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.