திருச்சி அருகே லாரி மோதி விபத்து; 2 பேர் பரிதாப பலி!

 

திருச்சி அருகே லாரி மோதி விபத்து; 2 பேர் பரிதாப பலி!

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்த போது தமிழகத்தில் விபத்து பெருமளவு குறைந்திருந்தது. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி கொரோனாவுக்கு முன்னர் இருந்தது போலவே, வாகன புழக்கம் அதிகரித்து விட்டது. அதே போல சாலை விபத்துகளும் அதிகமாகி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருச்சி அருகே லாரி மோதி விபத்து; 2 பேர் பரிதாப பலி!

திருச்சி மாவட்டம் பாலவாக்கம் அருகே லாரி ஒன்றும் கார் ஒன்றும் எதிரெதிரே வந்து கொண்டிருந்துள்ளது. கண்ணிமைக்கும் நொடியில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், காரில் இருந்த மற்ற 2 பேரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.