சென்னையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

 

சென்னையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசப்புரத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சயின் ஷா என்பவரும் நாகராஜ் என்பவரும் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிலிருந்து விஷவாயு வெளியானதால் சயின் ஷா கழிவு நீர்த் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ், உள்ளே விழுந்தவரை காப்பாற்ற அவரும் கழுவுநீர்த்தொட்டியில் இறங்கியுள்ள நிலையில் நாகராஜையும் விஷவாயு தாக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களது உடல்களை கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.