‘பைக் மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் பரிதாப பலி!

 

‘பைக் மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் பரிதாப பலி!

கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த வாகன புழக்கமும், விபத்துகளும் தற்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், குளித்தலை அருகே பைக் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

‘பைக் மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் பரிதாப பலி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்த பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ராஜசேகரன் மற்றும் பழனிசாமி ஆகியோர் தூக்கி வீசப்பட்டதால் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்குள்ளாகவே இரண்டு பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.