“பொம்பளைங்க போற இடத்துல , ஆம்பளைங்கள நிர்வாணமா அலைய விடறீங்களே”- இதுக்கு செல்போன் தான் காரணம்.

 

“பொம்பளைங்க போற இடத்துல , ஆம்பளைங்கள நிர்வாணமா அலைய விடறீங்களே”- இதுக்கு செல்போன் தான் காரணம்.

ஒரு கடைக்குள் சென்று செல்போனை திருடிய இரு வாலிபர்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற பலர் கைது செய்யப்பட்டார்கள் .

“பொம்பளைங்க போற இடத்துல , ஆம்பளைங்கள நிர்வாணமா அலைய விடறீங்களே”- இதுக்கு செல்போன் தான் காரணம்.


மும்பையின் கண்டிவாலியின் லால்ஜி பாதா பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடை கடந்த வாரம் புதன் கிழமை காலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது .அப்போது அந்த கடைக்குள் இரண்டு வாலிபர்கள் டிப்டாப்பாக வந்தார்கள் .அவர்கள் செல்போன் வாங்குவது போல பல செல்போன் மாடல்களை பார்த்தார்கள் .அப்போது கடையில் கூட்டம் அதிகமாயிருந்தததால் அவர்கள் அந்த கடையிலிருந்து சில விலை அதிகமுள்ள செல்போன்களை திருடிக்கொண்டனர் .
இந்த காட்சி அந்த கடையின் சிசி டிவி கேமராவில் பதிவாகியது .மேலும் அவர்கள் செல்போன் திருடும் காட்சியை அந்த கேமராவில் அந்த கடையின் ஊழியர்கள் சிலர் பார்த்து விட்டார்கள் .அதனால் கடையிலிருந்து செல்போன்களை திருடி விட்டு தப்பி சென்ற அவர்களை கையும் களவுமாக அவர்கள் பிடித்தார்கள் .அதன் பிறகு அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை கடை ஊழியர்கள் பறிமுதல் செய்தார்கள் .அதன் பிறகு அந்த செல்போன் திருடர்களை போலீசில் ஒப்படைக்காமல் அந்த கடையின் உரிமையாளர்களும், ஊழியர்களும் அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக அந்த பஜாரில் ஊரவலமாக அழைத்து சென்றார்கள் .இந்த காட்சியை படம் பிடித்த பலர் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்கள் .அந்த பஜாருக்கு பல பெண்களும் வரும் பகுதி என்பதால் இந்த அவல நிலை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது .போலீசார் விரைந்து வந்து அந்த நிர்வாண நிலையிலிருந்தவர்களுக்கு உடைகளை வழங்கி அவர்களை மீட்டார்கள் .பின்னர் இந்த தகாத செயலில் ஈடுபட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து ,ஐந்து பேரை கைது செய்தார்கள் .

“பொம்பளைங்க போற இடத்துல , ஆம்பளைங்கள நிர்வாணமா அலைய விடறீங்களே”- இதுக்கு செல்போன் தான் காரணம்.